எழுத வார்தைகள் இல்லை .... சோகம் என்னைமூழ்கடிக்கிறது ... 🙏
எனவே நண்பர் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்ததை இங்கு பதிவிடுகிறேன்:
பாடும் நிலா பாலு....
🎷கடந்த 50 வருடங்களாக உங்கள் குரல் ஒலிக்காத தென் இந்தியாவே இல்லை.
உங்கள் குரலை கேட்க்காத ரேடியோக்களும் இல்லை.
🎻 இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் குரல் இந்தியர்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.
இன்றைய இரைச்சல் இசைகளுக்கு நடுவே எப்போதும் உங்கள் பாடல்கள் எங்களின் செவிகளுக்கு மருந்து.
🥁*சிப்பி இருக்கு முத்தும் இருக்கு - ஆனால் இதை பாடிய பாலு இல்லை.
🎼🎼
🥁*அந்தி மழை பொழியும் - போதெல்லாம் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரியும்.
🥁எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் - கேட்க்கும்போதெல்லாம் எங்களுக்கு சந்தோசம்.
🎷*வளையோசை கலகலவென - ஒலிக்கும்போதெல்லாம் உன் குரல் இனிக்கும்.
*என்ன சத்தம் இந்த நேரம் - என்றாலே சந்தோச நேரம் என்று அர்த்தம்.
🎺 ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் - ஓயாமல் இசைக்கின்றது.
*இயற்கை எனும் இளைய கன்னி - ஏங்குகிறாள் உன் குரலை எண்ணி.
🥁*ஆயிரம் நிலவே வா - பாடிய பாலுவே எழுந்து வா.
*🎺வான் நிலா நிலா அல்ல - நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா.
*🎷இளைய நிலா பொழிகிறதே - கேட்க்கும்போதெல்லாம் இதயம் வரை நனைகிறதே.
*🎷இளமை எனும் பூங்காற்று - பாடியது பல பாட்டு.
*🎷நீல வான ஓடையில் - இசை எனும் மேடையில் நீந்தும் வெண்ணிலா நீ.
*மீண்டும் மீண்டும் வா - கேட்க்கும்போதெல்லாம் மீண்டு வா என்று வேண்டுகிறேன்.
🎷சின்னப் புறா ஒன்று - என்னக் கனாவினில் வாழ்கின்றது
🥁வா மச்சான் வா - மீண்டும் எழுந்து வா.
💐*மலரே மௌனமா - மலர்கள் மறையுமா?
🎷இது மௌனமான நேரம் - எந்தன் நெஞ்சு பாரமான நேரம்.
💐ஆயிரம் தாமரை மொட்டுக்களே - வந்து பாலுவை பாடச் சொல்லுங்களேன்.
🥁
*ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் - எங்களுக்கு பாலுதான் ராஜா.
*வந்தனம் என் வந்தனம் - உன் குரலுக்கு என் வந்தனம்.
🥁என் கண்மணி என் காதலி - ஓராயிரம் பாடல் பாடுகிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ.
*கடவுள் அமைத்து வைத்த மேடை - இப்போது நீ இல்லை என்று எழுதி வைத்தான் கடவுள் இன்று.
🎷வண்ணம் கொண்ட வெண்ணிலவே - நீங்கள் இசையமைத்து பாடிய பாடலையே உங்களுக்காக பாடத் தோணுகிறது.
🎷🥁💐வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
💐💐💐💐💐
இசையை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை
உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.
உங்கள் ஆன்மா சாந்தியடைய ப்ராத்திக்கும்
உங்கள் குரலின் மிகப் பெரிய ரசிகன்