Search This Blog

Pages

Friday, September 25, 2020

SPB... 😞 ஒரு சாகாப்தம் முடிந்தது ...! பாடும் நிலா மறைந்தது ...!


















எழுத வார்தைகள் இல்லை .... சோகம் என்னைமூழ்கடிக்கிறது ... 🙏

எனவே நண்பர் வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்ததை இங்கு பதிவிடுகிறேன்:

பாடும் நிலா பாலு....


🎷கடந்த 50 வருடங்களாக உங்கள் குரல் ஒலிக்காத தென் இந்தியாவே இல்லை.  
உங்கள் குரலை கேட்க்காத ரேடியோக்களும் இல்லை.  


🎻 இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் உங்கள் குரல் இந்தியர்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும்.
இன்றைய இரைச்சல் இசைகளுக்கு நடுவே எப்போதும் உங்கள் பாடல்கள் எங்களின் செவிகளுக்கு மருந்து.

🥁*சிப்பி இருக்கு முத்தும் இருக்கு - ஆனால் இதை பாடிய பாலு இல்லை.
🎼🎼

🥁*அந்தி மழை பொழியும் - போதெல்லாம் ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரியும்.

🥁எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம் - கேட்க்கும்போதெல்லாம் எங்களுக்கு சந்தோசம்.

🎷*வளையோசை கலகலவென - ஒலிக்கும்போதெல்லாம் உன் குரல் இனிக்கும்.
*என்ன சத்தம் இந்த நேரம் - என்றாலே சந்தோச நேரம் என்று அர்த்தம்.

🎺 ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான் - ஓயாமல் இசைக்கின்றது.
*இயற்கை எனும் இளைய கன்னி - ஏங்குகிறாள் உன் குரலை எண்ணி.
🥁*ஆயிரம் நிலவே வா - பாடிய பாலுவே எழுந்து வா.
*🎺வான் நிலா நிலா அல்ல - நீ இல்லாத நாள் எல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா.

*🎷இளைய நிலா பொழிகிறதே - கேட்க்கும்போதெல்லாம் இதயம் வரை நனைகிறதே.

*🎷இளமை எனும் பூங்காற்று -  பாடியது பல பாட்டு.

*🎷நீல வான ஓடையில் - இசை எனும் மேடையில் நீந்தும் வெண்ணிலா நீ.
*மீண்டும் மீண்டும் வா - கேட்க்கும்போதெல்லாம் மீண்டு வா என்று வேண்டுகிறேன்.


🎷சின்னப் புறா ஒன்று - என்னக்  கனாவினில் வாழ்கின்றது


🥁வா மச்சான் வா - மீண்டும்  எழுந்து வா.

💐*மலரே மௌனமா - மலர்கள் மறையுமா?


🎷இது மௌனமான நேரம் - எந்தன் நெஞ்சு பாரமான நேரம்.


💐ஆயிரம் தாமரை மொட்டுக்களே - வந்து பாலுவை பாடச் சொல்லுங்களேன்.

🥁
*ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும் - எங்களுக்கு பாலுதான் ராஜா.
*வந்தனம் என் வந்தனம் - உன் குரலுக்கு என் வந்தனம்.


🥁என் கண்மணி என் காதலி - ஓராயிரம் பாடல் பாடுகிறான் அம்மம்மா இன்னும் கேட்க தூண்டுமோ.
*கடவுள் அமைத்து வைத்த மேடை - இப்போது நீ இல்லை என்று எழுதி வைத்தான் கடவுள் இன்று.

🎷வண்ணம் கொண்ட வெண்ணிலவே - நீங்கள் இசையமைத்து பாடிய பாடலையே உங்களுக்காக பாடத்  தோணுகிறது.

🎷🥁💐வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
பக்கத்தில் நீயும் இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
சுவாசிக்க ஆசை இல்லை
💐💐💐💐💐

இசையை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கும் வரை
உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

          உங்கள் ஆன்மா சாந்தியடைய ப்ராத்திக்கும்
                உங்கள் குரலின் மிகப் பெரிய ரசிகன்



Sunday, June 28, 2020

ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த

எண்பதுகளில் இசை ஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்த நேரத்தில் பிற இசையமைப்பாளர்களின் பாடல்களும் இளையராஜா பாடல்களை போன்றே தோற்றம் பெற்று பிரபலமாக ஹிட் கொடுத்து கொண்டு இருந்தது. இப்படியாகப்பட்ட ஒரு பாடலை இப்போது பார்ப்போம்.

நான் தினமணி பேப்பர் வாங்குகிறேன். என்னடா பாட்டு பற்றின பதிவில் செய்தி தாளைப் பற்றி சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்.ஞாயிற்றுக்கிழமைகளில் தினமணி பேப்பரில் தமிழ்மணி என்ற ஒரு பகுதி முழு பக்கத்திற்கு வரும். அந்தப் பகுதிகளில் தமிழ் இலக்கியங்களைப் பற்றி தமிழ் பாடல்களைப் பற்றி நிறைய கட்டுரைகள் தமிழ் அறிஞர்கள் எழுதி இருப்பார்கள்.அதில், ஒரு பாடலில் தலைவன் பொருள் தேடி வெளியூருக்கு சென்று இருக்கும்பொழுது தலைவி அவனை நினைத்து தனது தோழியை தூது விடுவதாக அமைந்த ஒரு பாடலை பற்றி போட்டிருந்தார்கள்.

தமிழ் சிற்றிலக்கியங்களில் தூது இலக்கியம் என்று ஒரு தனி வகை உண்டு. காக்கை விடு, நாரை விடு தூது, அன்னம் விடு தூது ,தமிழ் விடு தூது, நெஞ்சு விடு தூது .....என்று நிறைய உண்டு . பொதுவாக மனிதர்களையும், அஃறிணை வகைகளையும் பயன்படுத்தி தூது பாடல்கள் அமைந்து இருக்கும்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் நளவெண்பாவில் அன்னம் விடு தூதுவை எங்களது தமிழ் விரிவுரையாளர்,(கண்ணம் மறைக்கும் அளவிற்கு வீரப்பன் மீசையுடன் பயங்கரமாக காட்சி அளிப்பார் , மீசைக்காரர் என்றே பட்டப் பெயர் வைத்திருந்தோம் ) அன்னம் நளனுக்கு தமயந்தி பற்றின அழகை விவரிப்பதை அவ்வளவு அருமையாக விளக்கி னார். இன்னொரு விரிவுரையாளர் பாடியே காட்டுவார் . நம்ம தமிழ் புலவர்கள் எவ்வளவு கற்பனை வளத்துடன் பாட்டு எழுதி இருக்கிறார்கள் என்று ஆச்சிரியப்பட்டேன். தூது இலக்கியத்திற்கு கலிவெண்பா என்ற வகை தான் சிறந்தது என்று கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. ( யாப்பு இலக்கணம் நேர் நேர் நிரை மா , நிரை நேர் புளிமா , என்று படித்தது ஞாபகம் வருகிறதா நண்பர்களே....)

இப்படியாக தூதுவிடும் பாடல்கள் தமிழ் திரைப்பாடல்களில் நிறைய இருக்கிறது.

  • பச்சை விளக்கு படத்தில் "தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி" என்று தோழியை தூது விடுகிறார் கவிஞசர் கண்ணதாசன்
  • "பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ" படகோட்டி படத்தில் கவிஞசர் வாலி வெள்ளலையை தூது விட்டு இருப்பார்,
 எங்கம்மா சபதம் படத்தில் வரும் "அன்பு மேகமே இங்கு ஒடி வா " என்ற பாடலில் மேகம் தூது ஆக வரும், 16 வயதினிலே படத்தில் வரும் செந்தூரப்பூவே செந்தூரப்பூவே என்ற பாடலில் பாடலாசிரியர் கங்கை அமரன்
  • "தென்றலைத் தூது விட்டு ஒரு சேதிக்குக் காத்திருப்பேன்!கண்களை மூட விட்டு இன்பக் கனவினில் நான் மிதப்பேன்" என்று தென்றலையும்  
  • "நீலக் கருங்குயிலே! தென்னைச் சோலைக் குருவிகளே!கோலமிடும் மயிலே! நல்ல கானப் பறவைகளே!மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்!காலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்!வண்ணப் பூவே! தென்றல் காற்றே!என்னைத் தேடி சுகம் வருமோ?"  என்று காற்று, மயில், குயில் என்று தூதாக அனுப்பி இருப்பார்.
அவரே பின்னர் கிழக்கே போகும் ரயிலில் 'பூவரசம்பூ பூத்தாசு , பொண்ணுக்கு சேதி வந்தாச்சு ' என்ற பாடலில்
  • "தூது போ ரயிலே ரயிலே ,துடிக்குது ஒரு குயிலே குயிலே " என்று ரயிலை தூதாக அனுப்பி இருப்பார்.
பாடலாசிரியர் தாமரை அவர்கள், ‘காக்க காக்க’ திரைப்படத்தில்
  • "தூது வருமா, தூது வருமா, காற்றில் வருமா ,கரைந்து விடுமா கனவில் வருமா ,கலைந்து விடுமா" என்று கேட்டு இருப்பார் .
Achamillai Achamillai
நாட்டுப்புற பாடல்களில் தூது பாடல்கள் உண்டு. எங்கள் கிராமத்து தோட்டத்தில் பெண்கள் பாடி கொண்டே கரும்பு நடவும் போது, அடுத்த பாத்தியில் கரும்பு நடவும் ஆண்கள் பதில் சொல்லுவது போன்று அதே ராகத்தில் திருப்பி பாடுவதை சிறுவனாக வேடிக்கை பார்த்து இருந்து இருக்கிறேன்.கேள்வி பதில் போல எச பாட்டாகவும் இருக்கும்.அப்படியான ஒரு நாட்டு புற தூது பாட்டு தான்  "ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த," பாடல் . இதில் நீர் அருவி தூது பொருளாக அமைகிறது . 

இளைய ராஜா ஒரு முறை தனது வயலின் இசைக்கலைஞர் ஒருவரை பற்றி கூறும் போது, இவர் என்னை விட திறமை மிக்கவர் என்று சொன்னதினால் , K பாலச்சந்தர், தனது அச்சமில்லை அச்சமில்லை என்ற படத்தில் அவரை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்தார். அவர் பெயர் வி‌.எஸ். நரசிம்மன். அந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் , அதில் இரண்டு பாடல்கள் செம்ம ஹிட். " ஆவாரம் பூவு ஆறேழு நாளா" " ஓடுகிற தண்ணியில ஒரசி விட்டேன் சந்தனத்த" என்ற பாடல்கள்.இரண்டு பாடல்களையும் அப்போது வானொலியில் அடிக்கடி ஒலி பரப்புவார்கள்.
https://www.youtube.com/watch?v=5WKPapEz6FI&feature=emb_err_woyt

பாடல்களில் வரும் தபேலா,மத்தளம், கிதார், ஆகியவற்றின் இசை கோர்வைகள், interlude இசைகள் அப்படியே இளையராஜாவை போன்றே இருக்கும். நன்கு உற்று கேட்டால் depth, tempo வில் உள்ள வித்தியாசங்கள் புரிய வரும்.

மேகத்த தூது விட்டால் , திசை மாறி போகும் என்று , தண்ணீரை தூது விடுகிறாள் காதலி. கூடவே முத்ததையும் அனுப்பி, எப்போ வந்து திருப்பி எண்ணிக்கை குறையாமல் தர போகிறாய் என்று கேட்கிறாள்....

"ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த
சேந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே"

பேச்சு வழக்கில் எழுதப்பட்ட பாடல், (நாட்டு புற பாட்டு போன்று....) . நிறைய பேர் இது இளையராஜா இசை அமைத்த பாடல் என்று தவறாக நினைத்து கொண்டு இருப்பார்கள்.

 (80/90 களில் தற்போது உள்ளது போன்று வாட்ஸ் ஆப் , பேஸ்புக் , செல் ஃபோன் என்று வசதிகள் கிடையது . அன்றைய காலகட்டத்தில் தனது காதலை கடிதம் மூலமாகவோ, வாழ்த்து அட்டை மூலமாகவோ , நண்பர்கள் மூலமாகவோ , அல்லது மனசின் எண்ணத்தியே தூதாக அனுப்பிவிட்டு சேர்ந்துசோ ,சேரலையோ என்று இப்பாடலில் வரும் கதாநாயகியை போன்று தவித்து கொண்டு இருந்தது ஞாபகம் வரும், இப்பாடலை கேட்கும் 80's/90 கிட்ஸ்களுக்கு, அதுவும் பெண்களுக்கு ...!)

பின் குறிப்பு :
"ஓடுகிற தண்ணியிலே ஒரசி விட்டேன் சந்தனத்த , சேந்திச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே"என்கிற வரிகள் 'பிள்ளைக் கணியமுது '  என்ற பழைய படத்தில் கூட வரும் . வைரமுத்து ஒரு இன்ஸ் பிரேசன்க்காக எடுத்து இருப்பாரோ.....?

"பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி,
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி"
என்ற பாடலின் வரிகள் கூட நளவெண்பாவில், அன்னம் தமயந்தியின் அழகை விவரிக்கும் பகுதி தான்...... !
பாடல் வரிகள் :

Sunday, June 14, 2020

என் இனிய பொன் நிலாவே

"என் இனிய பொன் நிலாவே" பிரபலமான இந்த பாடல் மூடு பனி  என்ற படத்தில் 1980 நவம்பர் 6 அன்று தீபாவளி அன்று ரிலீஸ் ஆகியது .  மற்ற தீபாவளி வெளியீடுகளான 'நிழல்கள்'  மற்றும் மற்றொரு பிரதாப் போத்தன்  படமான 'வறுமையின் நிறம் சிகப்பு'   ஆகியவற்றின்  போட்டியை எதிர்கொண்ட போதிலும், இந்த படம் வணிக ரீதியாக வெற்றிகரமாக இருந்தது, 200 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இளையராஜாவின் நூறாவது படம் .  எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய "இதுவும் ஒரு விடுதலை தான் " என்ற நாவலை தழுவி எடுத்த படம் தான் மூடு பனி . பாலு மகேந்திராவே  40 % இதுவும் ஒரு விடுதலை தான் " என்ற நாவலையும் , 60% தி கலெக்டர் என்ற நாவலயும்  அடிப்படையாகக் கொண்டு எடுக்கபட்ட படம் என்று சொல்லி உள்ளார்.
இனி இந்த படத்தில் இருக்கும் மூடு பனி விஷயங்கள் : 
  •  மூடு பனியின் பின்னணி ஸ்கோர் செய்யும் போது, ​​இளையராஜா தனது பழைய கீ போர்ட்  புரோகிராமரை அவருடைய குடிப்பழக்கத்தின் காரணமாக  நீக்கிவிட்டார். அப்போது மலையாள படங்களுக்கு கீ போர்ட் ப்ரோக்ராம்மிங்க் செய்து கொண்டிருந்த 13 வயது திலீப் என்ற கீ போர்ட் ப்ரோக்ராம்மரை பற்றி சொல்ல, இளையராஜாவின் மேற்பார்வையின் கீழ் திலீப், அவர் வாசிக்க வேண்டிய குறிப்புகள் மற்றும் பின்னணி இசையை  வெற்றிகரமாக வாசித்து முடித்தார். முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்த இந்த திலீப் தான் இப்போது "ஏ‌ஆர் ரஹ்மான்" ஆக அறியப்படுகிறார் .
  •  தனது கோகிலா என்ற முதல் படத்தில் நடிகர் மோகனை  அறிமுகபடுத்திய பாலு இந்த படத்திலும்  கோகிலா மோகன் என்று டைட்டில் போட்டு ஒரு சிறிய ரோலில் நடிக்க வைத்து இருப்பார். பின்னர் அவர் மைக் மோகன் ஆன கதை வேறு . 
  •  இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் கங்கை அமரன் எழுதியிருந்தார்.  படத்தின் நாயகன் கிதார் வாசித்து பாடுவது போன்ற ஒரு காட்சி . படத்தின் கிளைமாக்ஸ்க்கு முன்னர் வரும் "என் இனிய பொன் நிலாவே" பாடல் அது .இது நாட்ட பைரவி ராகத்தில் அமைந்தது , கங்கை அமரனின் கூற்று படி மூடு பனியில் உள்ள பாடல்களில் மிக கடினமான பாடல் ஆகும் . அந்த  பாடலுக்கு ட்யூன் போடும் போது முதலில் போட்டது " இளைய நிலா ஒளிகிறதே " ட்யூன் . அது பாலுவுக்கு திருப்ப்தியாக அமையவில்லை . வேறொரு ட்யூன் கேட்க்கவே அதற்க்கு அமைந்தது தான் இந்த 'என் இனிய பொன் நிலாவே' . பின்னாளில் 1982 இல் பயணங்கள் முடிவது இல்லை படத்தில்  இளைய நிலா ஒளிகிறதே ட்யூன் சரித்திரம் படைத்தது .   
Flim:Moodu Pani  |Music:Maestro Illayaraja| Lyricist:Gangai Amaran | Singers : K.J.Jesudas | Year : 1980

Download Here HQ Audio Improvised
பாலு மகேந்திரா தனது முதல் படத்துக்கு இளையராஜாவை தான் இசை அமைக்க ஆசைப்பட்டார். அதை பற்றி அவர் தனது வலை பூவில் எழுதி இருப்பதை அப்படியே கொடுத்து உள்ளேன் .

 // அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசையமைப்பாளர் தான் அந்தப் படத்திற்கு இசை. ஜி.கே. வெங்கடேஷ் எம்.எஸ்.வி யுடன் பணியாற்றியவர். நல்ல இசை ஞானம் உள்ளவர்.அந்தப் படத்திற்கான மியூசிக் கம்போசிங் மாம்பலத்திலிருந்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும். 

Tuesday, June 2, 2020

இசை ஞானி இளையராஜா பிறந்த நாள் ....!

இளையராஜாவின் 76 ஆவது பிறந்தநாள். அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் அதை வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
நேற்று இளையராஜாவின் ஆபீஷியல் யு  டூபிள் திகட்டத் திகட்ட அத்தனை பாடல்கள் லைவ் ஸ்ட்ரீமிங் இல் அனுபவித்தேன். அப்பொழுது ஏற்பட்ட கலவையான உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே கிடையாது ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு நினைவுகளை தூண்டியது. குழந்தைப் பருவத்தில் இருந்து இப்போது வரை வாழ்வில் ஏற்பட்ட ஒவ்வொரு நிகழ்வையும் அவரது பாடல்களைக் கொண்டுஎன்னுடைய வாழ்கையின்  நினைவுகளை தொடர்புபடுத்த முடிகிறது.

இளையராஜா இசை காலம் கடந்து நிற்கும் ஒரு இசை ஆகும். தமிழ் நண்பர்கள் அவர் வேறு மொழியில் இசையமைத்த பாடல்களை கேட்டு இருக்கேன் அவ்வளவாக வாய்ப்பு இருந்திருக்காது. ஆனால் நான் அப்படியல்ல தேடித் தேடி வேறு மொழிகளிலும் அவர் இசையமைத்த பாடல்களை கேட்டது உண்டு.

அப்படி ஒரு பாட்டு இங்கே. Techno வகையில் இசைக்கப்பட்டது. இதன் தமிழ் வடிவம் இந்திய இசை கருவிகளை கொண்டு வாசிக்க பட்டு இருக்கும். சிறப்பு அம்சம் தனுஷ் இந்த படத்தில் அட்டகாசமாக நடித்து இருப்பார். ஹிந்தி நடிகர்களுக்கு கொஞ்சம் கிலியை ஏற்படுத்தினார் என்றாள் மிகை அல்ல ..... ! இப்படதிர்க்கு இசை இசை ஞானி இளையராஜா தான் ......! பாடியது கமல்ஹாசன் பொண்ணு ஸ்ருதி ஹாசன் , நடனம் ஆடுவது இன்னொரு கமலின் பெண் அக்ஸ்ஹர ஹாசன் ....!

வீடியோ பிளே ஆகவில்லை எனில் யு டுபில்  பார்த்து விட்டு சொல்லவும்
https://www.youtube.com/watch?v=o0PFiyuhRz4



இந்தப் பாடலின் தமிழ் பாடல் என்ன என்று என்பதை சரியாக கண்டுபிடித்து சொல்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள மேரு மோதிரம் குலுக்கல் முறையில் உங்களை குலுக்கி சாரி உங்கள் பெயர்களை குலுக்கி வழங்கப்படும் ,போஸ்டல்சார்ஜ் தனி .... 🙏( போஸ்டல் சார்ஜை எனது அக்கவுண்டில் செலுத்தவும் )

கமன்ட் lலிங்கை கிளிக் செய்து கமெண்ட் செய்யவும்....அனானிமஸ் ஆக கூட கமண்ட் செயலாம் .....!

Sunday, May 31, 2020

ஹேய் உன்னைத் தானே ....!


(*கண்டிப்பாக கண்டிப்பாக ஹெட் போன் / இயர் போனில் மட்டுமே கேட்க வேண்டும்* 🙏🙏🙏)

முதலில் இந்த இசையை கேட்டு பாருங்கள். நிறைய இடத்தில் நிறைய பேர் இதை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

"போட்டி பாடல்" இது அநேகமாக எல்லா படங்களிலும் நாம் பார்த்து இருப்போம். ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து பாடி போட்டி போடுவது , உதாரணமாக " என்னமா கண்ணு சவுக்கியமா " மிஸ்டர் பாரத் படத்தில் இடம்பெறும் பாடல், முதல் மரியாதையில் வரும் " ஏறாத மாலை மேல ஏறி ",பாடல்கள் போல , இப்போ உங்களுக்கு புரிந்து இருக்கும் நான் எதை பத்தி சொல்ல வருகிறேன் என்று.

அப்படிப்பட்ட ஒரு துள்ளலான போட்டிப் பாட்டு தான் காதல் பரிசு என்ற படத்தில் வரும் "ஹேய் உன்னைத் தானே ....!" என்ற பாடல். ஏ ஆர் ரகுமான் டூயட் என்ற படத்தில் சாக்ஸ் போனை உபயோகப் படுத்தி ஒரு மெலோடி கொடுத்து இருப்பார். ஆனால் இந்தப் பாட்டு இளையராஜா அதே சாக்ஸ்போன்னை கொண்டு தனி ஆவர்த்தனம் செய்து அசத்தி இருப்பார் .

படத்தில் பாடகர்களுக்கு கொஞ்சம் அதிகப்படியான எக்கோ (Echo ) சேர்ந்து இருக்கும். பாடல் என்னவோ போட்டி பாடல் தான் ஆனால் பாடியது ஒரே பாடகர் தான். எஸ் பி பாலசுப்பிரமணியம் மட்டுமே. கமல் பாடும்போது நார்மல் ஆகவும் எதிராளி பாடுவதுபோல இருக்கும் பொழுது கொஞ்சம் குரலை தடித்த மாதிரியும் பாடி வித்தியாசப்படுத்தி இருப்பார். கூடவே ஜானகியும் பாடி இருப்பார்.

1.18 யிள் இருந்து ஆரம்பம் ஆகும் இடை இசையை கேட்டு பாருங்கள். லீட் கித்தார், டிரம்ஸ் , இதனுடன் கீ போர்டு இணைந்து இருக்கும். ஒரு துள்ளலான பாட்டிற்கு கித்தார் , ட்ரம்ஸ், போங்கோ , ஆகியவற்றை உபயோகப்படுத்தினால் அது ஒத்துக் கொள்ள கூடியது ஆனால் நடனத்திற்கு கீபோர்டை உபயோகப்படுத்தி அசத்தியிருப்பார் இளையராஜா.

1.40 வினாடியில் இருந்து 1.45 வரை மட்டுமே வரும் ஐந்து வினாடிகளில் ஒரு த்ரில்லான இசையை நமக்கு காட்டியிருப்பார். படத்தின் கதைப்படி ராதவை கொல்ல ஒரு கும்பல் காத்துக்கொண்டு இருக்கும். அந்த ஆபத்தான சுச்சுவேஷன்னை அந்த ஐந்து வினாடிகளில் நாம் உணர முடியும்.
Download Here (HQ File)  

இதுவரை நார்மலாக போய்க்கொண்டிருந்த ட்ரம்ஸ் இசை அதன் பிறகு சும்மா " டடம் , டடம் ,டடம் என்று பீட்ஸ்ஸூடனும் , டஸ் டஸ் என்ற ரைட் cymbal லும் , (ட்ரம்ஸ் வாசிப்பவர்கள் பக்கத்தில் ஒரு பெருசா வெண்கல தட்டு போல இருக்குமே அது தான்....! ) சும்மா நச்சென்று இருக்கும்.

Flim:Kadhal Parisu  |Music:Maestro Illayaraja| Lyricist: Vairamuthu  | Singers : S P Balasubramaniyam &  S Janaki, | Year : 1987

"வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா" என்ற வரிகளுக்கு பிறகு ஆரம்பமாகும் பாருங்கள் சாக்ஸாபோன் அட்டகாசம், 2.30 வினாடியில் ஆரம்பித்து 3:22 வரை செம துள்ளலாக இருக்கும். அதற்கு ஏற்றவாறு டிரம்ஸ் பீட் கூடவே கைகோர்த்துக்கொண்டு வெளுத்து வாங்கி இருக்கும்.

Sunday, May 24, 2020

எரியிலே இலந்த மரம் , தங்கச்சி வச்ச மரம்...!


Ber Jujube இலந்தை பழம்
கடைக்கு பொருட்கள் வாங்க போய் இருந்த போது இலந்தை வடையை  அருமையாக பாக் செய்து விற்பனைக்கு வைத்து இருந்தார்கள். எல்‌ஆர் ஈஸ்வரி பாடிய " எயந்த பயம் எயந்த பயம் " பாட்டு ஞாபகம் வந்தது. இதன் தாவரவியல் பெயர் சிகிபஸ் ஜூ ஜூ பா , ரம்நாசியே குடும்பத்தையே சேர்ந்தது. இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி இரும்புசத்து, புரதம் மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் விபரங்கள் கொடுத்து உங்களை வெறுப்பேத்த விரும்ப வில்லை .

இலந்தை வடையை பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்த இன்னொரு பாட்டு " எரியிலே இலந்த மரம் தங்கச்கி வச்ச மரம்...!" பாடல் தான். நான் ஒரு தீவிர எழுத்தாளர் சுஜாதா வாசகன் . அவர் எழுதிய ஒரு திரில்லர் நாவலை படமாக எடுத்த ஒரு படத்தில் தான் இந்த பாடல் இடம் பெற்று உள்ளது. படத்தின் பெயர் " கரை எல்லாம் செண்பக பூ ". 

KaraiyellamShenbagapoo.jpg
சிறுவனாக இருக்கும் போதே வானொலியில் நான்கு கேட்ட பாடல் இது. இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள் . கொஞ்சம் பெரியவன் ஆனதும் , சுஜாத்தாவின் "கரை எல்லாம் செண்பக பூ" நாவலை படிக்கும் போது அட இந்த தலைப்பில் ஒரு படம் இருக்குதே என்று பார்த்தால் , அவரின் நாவலை தான் படமாக எடுத்து இருந்தார்கள். நல்ல வேலை "ப்ரியா " படத்தை போல இப்படத்தை கந்தரகோலம் ஆக்க வில்லை . ஓரளவுக்கு நாவலில் இருப்பதை போன்றே எடுத்து இருந்தார்கள் . ஒரு சில மாற்றங்கள் தவிர. 
Download Here 


 Flim:Karaiyellam Shenbagapoo |Music:Maestro Illayaraja| Lyricist:Panchu Arunachalam | Singers : S. Janaki, Ilaiyaraaja & Chorus | Year : 1981

இந்த பாடலில் நாட்டுபுற பாடலும் , கிராமத்து இசையும் , மேற்கத்திய இசையும் கலந்து ஒரு கலவையாக இருக்கும். இளையராஜா எப்படி பாட்டு சொல்லி கொடுத்து பாடவைத்து இருப்பார் என்பதை இந்த பாட்டில் அறிந்து கொள்ளலாம் . அதனால் தான் பாட்டு எப்படி ஆரம்பம் ஆகிறது என்று தொடக்கத்தில் இருந்து கொடுத்து இருக்கிறேன் . ஹெட் போனில் கேட்டு பாருங்கள் . பாஸ் கிட்டார் எப்படி இசைக்கிறது என்று உற்று கேளுங்கள்.பின்னர் புரியும்,நாட்டுபுற பாட்டுக்கு வெஸ்ட்ர்ன் இசை எப்படி கலக்கிறது என்று .... இளையராஜாவின் அற்ப்புதமே அது தானே .

இப்படி ஒரு கிராமத்து பாடல்களின் பின்னனியில் ஒரு கிரைம் கதையை எழுதுங்கள் என்று இளையராஜா சுஜாத்தாவிடம் கேட்டு கொண்டதால் அவர் எழுதிய நாவல் தான் கரை எல்லாம் செண்பக பூ . ஆனந்த விகடனில் தொடராக வந்து உள்ளது . தொடருக்கு செம்ம வரவேற்பு .சுஜாத்தாவின் சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று....

Tuesday, May 19, 2020

நினைவோ ஒரு பறவை

நினைவோ ஒரு பறவை

எனது பள்ளித் தோழி பரமேஸ்வரி அவர்களின் தம்பி திரு கல்கி கார்த்தி  (ஒரிஜினல் டிராக் ஆடியோ பாடல்கள் ) அவர்கள் அனுப்பிய இந்த இரங்கல் கட்டுரையை அப்படியே கொடுத்து இருக்கிறேன் .
புகைபடங்கள் நன்றி : Flute King கல்கி சரவணன் .

 திரையுலகால் மறக்கப்பட முடியாத கலைஞன் புருஷோத்தமன் 
(இரத்த புற்று நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த புருஷோத்தமன் சிகிச்சை பலன் இன்றி காலமானார்  )
1978 இல் ராஜா, கமல்ஹாசன் பாரதிராஜா பாக்யராஜின் இணைப்பில் உருவாகிய சிகப்பு ரோஜாக்கள் என்ற படத்தில் பாடல்கள் எல்லாமே அருமையானவை.  இதிலே கமல் பாடிய "நினைவோ ஒரு பறவை" என்ற பாடல் உருவான கதை சுவராஸ்யமானது, அந்தக்காலகட்டத்தில் பிரபலமாகியிருந்த ஆங்கிலப்பாடலொன்றைக் கமல்ஹாசன் ஹம் பண்ணியதை எதேச்சையாகக் கேட்ட ராஜா அதே ஹம்மிங்கைப் போன்ற ஒன்றைச் சேர்த்து உருவாக்கிய பாடல்தான் நினைவோ ஒரு பறவை.

அதுமட்டுமல்லாமல். அந்தப்பாடலையும் மதிப்புக்குரிய ஜானகியுடன் சேர்த்து  கமலையே பாடவைத்திருப்பார் ராஜா. இந்தச் சுவையான சம்பவத்தை கமலும் ராஜாவும் சேர்ந்து பங்காற்றிய சில நிகழ்ச்சிகளிலும் கமல் நினைவுகூர்ந்து மகிழ்ந்திருப்பார். ஆனால் இந்தப்பாடலில் இன்னொரு விஷேடமும் அடங்கியுள்ளது அதை அந்தப்பாடல் ஒலிப்பதிவில் பங்காற்றிய இசைக்கலைஞர்கள் தவிர்த்து மற்றய எல்லோருமே அனேகமாக மறந்துவிட்டார்கள் அது என்னவென்றால் இந்தப்பாடலில்தான் தமிழ் திரையிசை வரலாற்றில் முதன் முதலாக ரோட்டோ ( Rototom ) என்ற புதியவகை ட்ரம்ஸ் உபயோகப்படுத்தப்பட்டது...பாடலின் இடையிசைகளைக் கேட்டுப் பாருங்கள் அதிலே மேலிருந்து கீழாக ஒரு ட்ரம்ஸ் ஒன்று ஒலிப்பதைக் கேட்கலாம் அதுதான் ரோட்டோ டிரம்ப்ஸ் .

இது உருவாக்கப்பட்டது அல்லது இசையுலகில் பயன்பாட்டுக்கு வந்தது 1968ம் ஆண்டு அதை சிங்கப்பூரிலிருந்து வாங்கிவந்து பழகி வாசித்தவர் ராஜாவின் ஆஸ்தான கலைஞர்களில் ஒருவரான புருஷோத்தமன்.
( The Rototom is a drum developed by Al Payson, Robert Grass, and Michael Colgrass that has no shell and is tuned by rotating.[1][2] A rototom consists of a single head in a die-cast zinc or aluminum frame. Unlike most other drums, this type has a variable definite pitch. Composers are known to write for them as tuned instruments, demanding specific pitches. Rototoms are often used to extend the tom range of a standard drum kit. They were commercialized by the drumhead company Remo Inc., of North Hollywood, California.[3])



அந்தக் கலைஞன் அமரராகிவிட்டதை இப்போதுதான் அறிந்தேன் மிகுந்த வருத்தத்துடன் உடனே மனதில் தோன்றியதை எழுதி இதைப்பகிர்கிறேன்.

ராஜாவுடன் பல்லாண்டுகளாக தோளோடு தோள் கொடுத்துப் பணியாற்றிய மூத்த கலைஞர்களில் ஒருவர் இவர் . அவரின் எத்தனையோ பாடல்களில் அற்புதமாக இவரின் ட்ரம்ஸ் வாசிப்பைக் கேட்கலாம்,
  • "மேகம் கொட்டட்டும்"
  •  "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்"

Monday, May 18, 2020

தீர்த்த கரைதனிலே...செண்பக புஸ்பங்களே


போன பதிவில் ஜென்சி பாடின மலையாள பாட்டு பற்றியும் , தமிழ் பாடல்களுக்கு நடுவில் மலையாள பாடல் வரிகள் வந்து இருப்பதை பற்றி சொல்லி இருந்தேன் . நிறைய நண்பர்கள் ஜென்சி இப்படி ஒரு அழகான மலையாள பாடலை தமிழ் படத்தில் பாடி இருக்கிறாரா ? .... நல்லா இருக்கு என்றும்,சிலர் சிறு வயதில் ரேடியோவில் கேட்டதாக ஞாபகம் என்றும் சொல்லி இருந்தார்கள் .

அவர்களை சொல்லி குற்றம் இல்லை . ஜென்சி பாடியது அதிகபட்சமாக ஒரு முப்பது பாடல்கள் தான் இருக்கும். ( முடிந்தால் எல்லா பாடல்களையும் தேடி எடுத்து போடப்பார்க்கிறேன் )

ஜென்சி பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட் பாடல்கள் தாம். அவற்றில் ஒன்று தான் நாம் இப்போது பார்ப்பது. பாடல் இடம் பெற்ற படம் "தை பொங்கல்" இந்த படதில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்."பனி விழும் பூ நிலவில்" பாடலை பற்றி இங்கு பார்க்கவும் .

 "தீர்த்த கரைதனிலே.. " என்று பாரதியார் பாடல் வரிகளைக் கொண்டு தொடங்கும் இந்த பாடலை எழுதியது M.G.வல்லபன். 'தீர்த்த கரைதனிலே' யில் இரண்டு பாடல்கள் உண்டு . ஒன்று ஜேசுதாஸ் பாடியது , இன்னொன்று ஜென்சி பாடியது . இந்திய வானொலிகளில் அதிகம் ஒலிபரப்பப்பட்ட பாடல் ஜேசுதாஸ் பாடிய பாடலாகும்.அது சோகப்பாடல்.

ஆனால் ஜென்சி பாடியது டூயட் பாடல் ஆகும்.இரண்டு பாடல்களுக்கும் இடையிசையில் சிறிது வித்தியாசம் காட்டி இருப்பார் இளையராஜா. பாடல் வரிகளிலும் சிறிய வித்தியாசம் இருக்கும் .

அது என்னமோ தெரியவில்லை ஜென்சி பாடிய பாடலை இந்திய வானொலி நிலையங்கள் அதிகமாக ஒலிபரப்பவில்லை. ஆனால் இலங்கை வானொலி இதை அதிகம் ஒலிபரப்பியுள்ளது. அதே போல "கரும்பு வில்" என்ற படத்தில் "மீன் கொடித்தேரில் மன்மதராஜன் ஊர்வலம் போகின்றான் " என்ற பாடல். அதிலும் KJ ஜேசுதாஸ் பாடிய பாடலை தான் இந்திய வானொலி நிலையங்கள் அதிகம் ஒலிபரப்பி உள்ளது. இப்பவும் அவர் பாடிய பாடலை தான் ஒலிபரப்புகிறார்கள். இந்த படத்தை போலவே கரும்பு வில் படத்திலும் அந்த பாடல் படத்தில் இடம்பெற்று இருக்கும்.

இதில் இந்த பாடலுக்கு ராதிகா பரத நாட்டியம் ஆடுவது போல ஆடியிருப்பார். தைய தக்கா என்று ஆடி இருப்பதை பார்க்க நன்றாக சிரிப்பு வரும் அதே போல் "கிழக்கே போகும் ரயில் " படத்தில் "மாஞ்சோலை கிளிதானோ" என்ற பாடலுக்கு ராதிகா பரதநாட்டியம் ஆடி இருப்பதை பார்த்தாலும் சிரிப்பு வரும்.

ஒரு அழகான பாட்டுக்கு எப்படி காட்சியமைப்பு அமைக்கக் கூடாது என்பதற்கு இந்தப் பாடலின் காட்சியமைபை நாம் உதாரணமாகக் கொள்ளலாம்.


பதிவிறக்கம் செய்ய Download Here 
ஜென்சி இந்தப் பாடலை மிக அனாசியமாக பாடி இருப்பார். ஓ ..ஓ.... ஓ.... என்று முதலில் அவர் பாடும் ஹம்மிங்க் முதலே நம்மை பாடலுக்குள் இழுத்து விட்டு இருப்பார். (யேசுதாஸ் பாடிய பாடலுக்கும் அதே ஹம்மிங்க் தான் ..... )

Flim :Thai Pongal|Music:Maestro Illayaraja| Lyricist:MG Vallaban | Singer:Jency | Year : 1980

"நாண... மேக வானிலே,நானும் நீயும் கூடியே..
மோக ராகம் பாடியே..போடும் காதல் நாடகம்
காவிரி ஓரமாய் கோவலன் காதலி
பூவிழி மாதவி காதலில் பாடிய"

என்று ஏணி வைத்து ஏறி மேலே போய் ,

கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே

என்று இறங்கி வந்து

கொஞ்ச வா......

என்று கொஞ்சி முடித்து இருக்கும் மெட்டு , இளையராஜா அசத்தி இருப்பார் .

Sunday, May 10, 2020

ஞான் ஞான் பாடனும்....!

இப்படி ஒரு சிச்சுவேஷன் நினைத்துப் பாருங்கள் :

காதலி காதலனுக்கு தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கடிதம் கொடுக்கிறாள். அல்லது காதலன் தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கடிதம் கொடுக்கிறான்.

ஆனால் அந்தக் கடிதத்தை காதலனோ காதலியோ படிக்க முடிவதில்லை ஏனென்றால் அதில் எழுதி இருப்பது வேறொரு மொழியில்.
இப்பொழுது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு என்னவாக இருக்கும்.கடிதம் நினைதவரிடம் போய் சேர்ந்து அதனால் ஏற்படும் ஒரு துள்ளலும், மகிழ்ச்சியும்,அதேசமயம் கடிதத்தை அவர் படிக்க முடியாமல் போனதற்காக ஏற்படும் ஒருவிதமான சோகமும், அதற்கு நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஒருவிதமான ஏக்கமும் ஏற்படும். ஒரு விதமான கையறு நிலை.

இதை எழுத்தில் மிக எளிதாக எழுதி விடலாம் ஆனால் அதை நாம் இசையில் தருவது மிகவும் சவாலான ஒரு பணியாகும்.

இந்த முதலாவது interlude யை , கேட்டுப்பாருங்கள்.



இதில் முதலில் வரும் லீட் கிடார் இசையும் , கீ போர்டுடன் கூடிய குக்கு குக்கூ குயில் போன்ற புல்லாங்குழல் இசையும் அந்த துள்ளலை காட்டி இருக்கும். அதற்கு அடுத்து வரும் புல்லாங்குழல் இசையும், சோலோ வயலினும் ஒரு மென்மையான சோகத்தை உணர செய்திருக்கும். இசை ஞானி இளையராஜாவை தவிர இப்படி உண்ர்வுகளை யாரும் கொடுக்க முடியாது . 

இரண்டாவது interlude யை கேட்டுப்பாருங்கள்



இது அப்படியே முதலாவது Interlude யை வேறொரு தாள கட்டுகளில் காட்டி இருக்கும்.

இந்த பாடல் இடம் பெற்ற படம் "பூந்தளிர்" ,1979 களில் வெளிவந்த படம். இதில் சிவகுமார் ஒரு ஓவியர் ,சுஜாதாவிற்கு காதல் கடிதம் எழுதி இருப்பார் ஆனால் அந்த கடிதத்தை சுஜாதாவால் படிக்க முடியாது ஏனெனில் அவர் ஒரு மலையாளப் பெண்ணாக நடித்து இருப்பார்.பாடல்களில் அதை படித்துக் காட்டச் சொல்லி ஒரு தமிழ் பெண்ணிடம் கேட்பாள் அவள் எனக்கு வளையலும் புடவையும் வாங்கித் தந்தால்தான் படித்துக் காட்டுவேன் என்று லஞ்சம் கேட்பாள். 

முதல் இடை இசை முடிந்தவுடன், " மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் அதிசயம் " என்று ஜென்சி பாடலை பாடியிருப்பார். பாடல் மெதுவாக ஆரம்பித்து ஹை பிட்சில் முடிவது போல இருக்கும் , பிசிறு தட்டாமல் தனது இனிமையான குரலில் ஜென்சி மயக்கி இருப்பார். வரிகளின் அர்த்தங்கள் புரியாமல் போனாலும் , அதன் உணர்வுகளை நாம் நன்றாக உணர முடியும் . பாடலில் ஒரு துள்ளல், அதே சமயம் ஒரு சோகமான ஏக்கம் கலந்து இருக்கும். 5 வயது தான் இருக்கும் அப்போது எனக்கு, ஆனாலும் இந்த பாடல் வானொலியில் கேட்கும் போது அந்த வயதிலும் ஜென்சியின் குரல் என்னை கட்டி போட்டது .  அவர் தமிழ் படங்களில் படியாது மொத்தம் 25 இல் இருந்து 30 தான் இருக்கும் . அதில் இதுவும் ஒன்று.
  Flim :Poonthalir |Music:Maestro Illayaraja| Lyricist:Vaali | Singer:Jency | Year : 1979
பதிவிறக்கம் செய்ய Download Here 
  அன்றைய காலகட்டங்களில் இந்தப்பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்ப கேட்டு இருந்திருக்கிறேன் . ஆனால் இந்திய வானொலிகளில் இந்தப் பாடல் மிகவும் குறைவாகவே ஒலிபரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் இந்தப் படத்தில் இருந்த மற்ற பாடல்கள் "வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தள்ளாடுது" , " ராஜா சின்ன ராஜா " " மனதில் என்ன நினைவுகள்ளோ" ,போன்ற பாடல்கள் இந்தப் பாடலை மறைத்துவிட்டு இருந்தன.
பாடல் வரிகள் :
ஞான் ஞான் பாடணும் ஊஞ்சால் ஆடனும்
ராக்கிளி ஆகணும் ராப்பகல் கூவனும்
பூன்னெழில் கோமளம் தென் தெங்கில் தோரணம்
பனிலே தேனிலே இதிலே இதிலே .... ஞான் ஞான் பாடணும்

மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் ரகசியம்
கூவுன ராகங்கள் புரியாத அதிசயம்பூந்தென்றல் காற்றிலே புஷ்பபாண அபிநயம்
மானாட பிரமையே மனதங்கில் சுகமயம்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி ..... ஞான் ஞான் பாடணும்


பூந்தளிர் ஆடும் போல் தாளிரிடும் ஸ்வாஸங்கள்
பைங்கிளி ஆடும் போல் பரவச தாளங்கள்
பிரஹ்ருதியில் கவிதைகள் எழுதிய ஈஸ்வரன்
பலமுற பிபாடிடும் இலவேனில் காலங்கள்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி ......ஞான் ஞான் பாடணும்

Tuesday, April 28, 2020

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

கோரஸ்- எல்லா இசையமைப்பாளர்களும் இதை தங்களது இசையில் ஒரு அம்சமாக பயன் படுத்தி இருப்பார்கள்.

         "ஆஹா... ஹா , ஓஹோஹோ, ல ... ல... லலா ... லாலலலலா, ம்... ம்... ம்" என்று ஹம்மிங்க் கொடுப்பதாகட்டும் இல்லை பாடல்களின் சில வரிகள் ஆகட்டும், மெயின் பாடல்களுக்கு துணையாக பாடுவது கோரஸ் . இதை இளையராஜா மிக அருமையாக கையாண்டிருப்பார். இளையராஜாவின் கோரஸ் என்பது தனித்துவமானது. அதில் எனக்கு பிடித்த ஒரு கோரஸ் கலந்த பாட்டு தனிக்காட்டு ராஜா என்ற படத்தில் வரும் "ராசாவே உன்ன நான் எண்ணித்தான்" எஸ்‌பி சைலஜாவின் இனிய குரலில் , கவிஞசர் வாலியின் வரிகளுக்கு இசை ஞானி இளையராஜா இசை அமைத்து இருப்பார்.

    இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் வழக்கமாக கோரஸ் பாடுபவர்களுக்கு ஹம்மிங்க் அல்லது பாடல் வரிகள் இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் அதுபோக பாட்டுக்கான இசையையும் கோரஸ் பாடுபவர்களை கொண்டே அமைத்திருப்பார்.

       பாடலின் 1:05 வது வினாடியில் வரும் இந்த பிட் Perlude ல் "தன தம் தம் தம் தம் தம் , தன தம் தம் தம் தம் தம்" , என்ற ரிததில் கொண்டுபோய் ,"தம் ததம் , தம் ததம்", என்று பாஸ் விட்டு கூடவே கிதாரும் , புல்லாங்குழல் இசையும் இணைத்து அசத்தி இருப்பார் . ஒரு கித்தாரை கொண்டோ அல்லது வேறு இசை கோர்வைகளை கொண்டு இந்த "தம் ... தம்..." இடத்தை நிறைப்பி இருக்கலாம். ஆனால் கோரஸ் பாடகர்களை கொண்டே அதை செய்து இருப்பார் . கோரஸ் குழு ஹம்மிங் பாடி எஸ்‌பி சைலஜாவுக்கு அடுத்த வரிக்கு வழி அமைத்து கொடுத்து இருபார்கள் . கேட்டு பாருங்கள் :

      அடுத்து வரும் கோரஸ்ல்" பிபீபிபீப்... பிபீப்பீ ... பிபீ பி பி பி " என்று நாதஸ்வரத்தை போல கோரஸ் பாடுபவர்களை கொண்டே பாட வைத்திருப்பார். அவர்களுடன் பாஸ் கிதார் அழகாக கூடவே கை கோர்த்து வரும். பின்னர் ரிதம் கிதார் நம்மை பாடலின் அடுத்த வரிகளுக்கு எடுத்துச் செல்லும் . கேட்டு பாருங்கள் :

     இந்தப் பாடல் 80' களில் காதல் வயப்பட்ட இளம் பெண்களின் மனதை படம் பிடித்து காட்டுவதாக இருந்தது .அதில் உள்ள ஒவ்வொரு வரியும் அந்த பெண்ணின் ஏக்கத்தை காட்டும். அப்போதைய பெண்களின் வேண்டுதலை அப்படியே இந்த பாடலின் வரிகள் சொல்லும்."மாக்கோலம் போட்டு மாவிளக்கு ஏந்தி நீ கிடைக்க நேர்ந்துக்கிட்டேன்...." இன்னும் சொல்ல போனால் இப்போதைய பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் போகும் 80 களில் இருந்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இப் பாடலை கேட்டால் கண்டிப்பாக ஓரு மலரும் நினைவுகள் ஓடும் .
பதிவிறக்கம் செய்ய

ஹெட் போன் / இயர் போன் இதில் கேட்க்கவும் :
 Flim :Thanikattu Raja |Music:Maestro Illayaraja| Lyricist:Vaali | Singer:SP Sailaja | Year : 1982


ராசாவே உன்ன நான் எண்ணித்தான
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே... ராசாவே...... ராசா......வே

தன தம் தம் தம் தம்
தன தம் தம் தம் தம்
தன தம் தம் தம் தம் தம் தம் தம்
தம் தம் தம் தம் தம் தம் தம்
ததம் தம் ததம் தம் ததம் தம் ததம் தம்
ததம் தம் ததம் தம் ததம் தம் ததம் தம்

ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்
 
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராச.....வே