Search This Blog

Pages

Tuesday, April 28, 2020

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

கோரஸ்- எல்லா இசையமைப்பாளர்களும் இதை தங்களது இசையில் ஒரு அம்சமாக பயன் படுத்தி இருப்பார்கள்.

         "ஆஹா... ஹா , ஓஹோஹோ, ல ... ல... லலா ... லாலலலலா, ம்... ம்... ம்" என்று ஹம்மிங்க் கொடுப்பதாகட்டும் இல்லை பாடல்களின் சில வரிகள் ஆகட்டும், மெயின் பாடல்களுக்கு துணையாக பாடுவது கோரஸ் . இதை இளையராஜா மிக அருமையாக கையாண்டிருப்பார். இளையராஜாவின் கோரஸ் என்பது தனித்துவமானது. அதில் எனக்கு பிடித்த ஒரு கோரஸ் கலந்த பாட்டு தனிக்காட்டு ராஜா என்ற படத்தில் வரும் "ராசாவே உன்ன நான் எண்ணித்தான்" எஸ்‌பி சைலஜாவின் இனிய குரலில் , கவிஞசர் வாலியின் வரிகளுக்கு இசை ஞானி இளையராஜா இசை அமைத்து இருப்பார்.

    இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் வழக்கமாக கோரஸ் பாடுபவர்களுக்கு ஹம்மிங்க் அல்லது பாடல் வரிகள் இருக்கும். ஆனால் இந்தப் பாடலில் அதுபோக பாட்டுக்கான இசையையும் கோரஸ் பாடுபவர்களை கொண்டே அமைத்திருப்பார்.

       பாடலின் 1:05 வது வினாடியில் வரும் இந்த பிட் Perlude ல் "தன தம் தம் தம் தம் தம் , தன தம் தம் தம் தம் தம்" , என்ற ரிததில் கொண்டுபோய் ,"தம் ததம் , தம் ததம்", என்று பாஸ் விட்டு கூடவே கிதாரும் , புல்லாங்குழல் இசையும் இணைத்து அசத்தி இருப்பார் . ஒரு கித்தாரை கொண்டோ அல்லது வேறு இசை கோர்வைகளை கொண்டு இந்த "தம் ... தம்..." இடத்தை நிறைப்பி இருக்கலாம். ஆனால் கோரஸ் பாடகர்களை கொண்டே அதை செய்து இருப்பார் . கோரஸ் குழு ஹம்மிங் பாடி எஸ்‌பி சைலஜாவுக்கு அடுத்த வரிக்கு வழி அமைத்து கொடுத்து இருபார்கள் . கேட்டு பாருங்கள் :

      அடுத்து வரும் கோரஸ்ல்" பிபீபிபீப்... பிபீப்பீ ... பிபீ பி பி பி " என்று நாதஸ்வரத்தை போல கோரஸ் பாடுபவர்களை கொண்டே பாட வைத்திருப்பார். அவர்களுடன் பாஸ் கிதார் அழகாக கூடவே கை கோர்த்து வரும். பின்னர் ரிதம் கிதார் நம்மை பாடலின் அடுத்த வரிகளுக்கு எடுத்துச் செல்லும் . கேட்டு பாருங்கள் :

     இந்தப் பாடல் 80' களில் காதல் வயப்பட்ட இளம் பெண்களின் மனதை படம் பிடித்து காட்டுவதாக இருந்தது .அதில் உள்ள ஒவ்வொரு வரியும் அந்த பெண்ணின் ஏக்கத்தை காட்டும். அப்போதைய பெண்களின் வேண்டுதலை அப்படியே இந்த பாடலின் வரிகள் சொல்லும்."மாக்கோலம் போட்டு மாவிளக்கு ஏந்தி நீ கிடைக்க நேர்ந்துக்கிட்டேன்...." இன்னும் சொல்ல போனால் இப்போதைய பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் போகும் 80 களில் இருந்த ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இப் பாடலை கேட்டால் கண்டிப்பாக ஓரு மலரும் நினைவுகள் ஓடும் .
பதிவிறக்கம் செய்ய

ஹெட் போன் / இயர் போன் இதில் கேட்க்கவும் :
 Flim :Thanikattu Raja |Music:Maestro Illayaraja| Lyricist:Vaali | Singer:SP Sailaja | Year : 1982


ராசாவே உன்ன நான் எண்ணித்தான
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே... ராசாவே...... ராசா......வே

தன தம் தம் தம் தம்
தன தம் தம் தம் தம்
தன தம் தம் தம் தம் தம் தம் தம்
தம் தம் தம் தம் தம் தம் தம்
ததம் தம் ததம் தம் ததம் தம் ததம் தம்
ததம் தம் ததம் தம் ததம் தம் ததம் தம்

ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்திகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்
 
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ...பூ வச்சேன் பொட்டும்
வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராச.....வே

No comments:

Post a Comment